பெயர்க்காரணம்-
குறள் என்பது ஈரடி வெண்பா.மேன்மையான வெண்பா என்பதால் திருக்குறள் என பெயரிடபட்டது.
இங்கு ஈரடி வெண்பா திரிந்து வெறும்பா ஆனதால் கிறுக்கிறள் ஆனது.
கிறுக்கிறள்- 2008AD
வாங்க!!!! வாங்க!!!!
வாங்க!!!! வாங்க!!!!நீங்க வந்து படிக்கிறதுக்கு சந்தோசம்!!
நிறை குறை சொல்லிட்டு போனா ரொம்ப சந்தோசம்!
You tube Channel-->
நிறை குறை சொல்லிட்டு போனா ரொம்ப சந்தோசம்!
You tube Channel-->
Saturday, October 31, 2009
பாகம்-9
மருந்தாய் மிடுக்காய் மதிப்பாய் மிளிர்வாள்
மருமகளாகி மாமியாரானதை மறவாதவள்.
__________________________________________________________
விந்தை விளக்க சிந்தை செழிக்க
விழியாகி வழியாவான் தந்தை.
___________________________________________________________
அறிவை அருளாய் அன்பை அமுதாய்
அறமாய் அளிப்பவள் அன்னை.
___________________________________________________________
இல்லா இடுக்கண் இருப்பதாய் நினைந்தால்
இருக்கும் இன்பம் இல்லாதாகும்.
___________________________________________________________
அடிமை வாழ்வின் செழுமையினும் சுதந்திர
வாழ்வின் வறுமை உயர்ந்தது.
___________________________________________________________
இன்பம் பெருக்கி துன்பம் வகுக்கும்
தன்னலம் இல்லா நல்லுறவு.
___________________________________________________________
எளியோரை வலியோராக்கி இன்னல் நீக்கி
பேரின்பம் பகரும் பக்தி.
___________________________________________________________
எதனை இழந்தாலும் என்றும் உயிர்த்திடும்
எதிர்பார்ப்பு இல்லா அன்பு.
___________________________________________________________
குயவரால் களிமண்ணும் கலையாகும் நல்
குருவால் அறிவிலிகளும் அறிஞராவர்.
___________________________________________________________
முயற்சி முதலில் தோல்வி தொட்டாலும்
வெற்றிக்கு வித்திடும் விடாமுயற்சி.
___________________________________________________________
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment