வாங்க!!!! வாங்க!!!!

வாங்க!!!! வாங்க!!!!நீங்க வந்து படிக்கிறதுக்கு சந்தோசம்!!
நிறை குறை சொல்லிட்டு போனா ரொம்ப சந்தோசம்!

You tube Channel-->

Sunday, March 14, 2010

பாகம்-12



புரியாபோதும் பிறர் சிரிக்க நாம்
சிரித்தல் கட்டாயச் சிரிப்பு.
__________________________________________________________

சபை வேண்டி சண்டைகாரர் ஆயினும்
சுமக்கும் சிரிப்பு புன்சிரிப்பு.
__________________________________________________________

இல்லா இடத்தில் இருக்காது -இருக்கும்
இடத்தில் இல்லை இருக்காது.

__________________________________________________________

என்னாளுமே பொன்னாளாக விண்ணாள எண்ணாது
உனையாள உள்ளம் உறுதிசெய். __________________________________________________________

வலி இல்லா வாழ்வில் வழியும்
இல்லை ஒளியும் இல்லை.
__________________________________________________________

இன்பம் சுருங்கி இன்னல் பெருகும்
உள்ளம் இறுகும் எனில்.

__________________________________________________________

வெறுப்புடன் விட்டு கொடுத்தலினும் விருப்புடன்
புரிதல் கூட்டும் பயன்.
__________________________________________________________

தொடங்கும் வேலையில் அடிப்படை முதலடி
தயார்நிலை எனும் வெற்றிப்படி.
__________________________________________________________

இறங்குவார் என்று இறுமாப்பாய் இல்லாது
இறங்கலே இறுக்கம் இறக்கும்.
__________________________________________________________

விதித்தபடி வாழ்வென வாழாது நீ
வித்திட்டபடி வாழ்தல் வலிவு.
__________________________________________________________

No comments:

Post a Comment