வாங்க!!!! வாங்க!!!!

வாங்க!!!! வாங்க!!!!நீங்க வந்து படிக்கிறதுக்கு சந்தோசம்!!
நிறை குறை சொல்லிட்டு போனா ரொம்ப சந்தோசம்!

You tube Channel-->

Thursday, August 25, 2011

பாகம் -20

ஒன்றுபட்டு குரல் கொடுக்க - ஒடுக்கும்
அரசும் செவி மடுக்கும்.
_____________________________________________________

பிரார்த்தனை ஆராதனை பலன்தரா பகட்டிடம்
பக்தி பணியும் போது.
_____________________________________________________

சுணக்கம் இல்லா சுய சிந்தனையை
சுடர்விட செய்யும் சுதந்திரம்.
_____________________________________________________

வீம்பு வம்பை வளர்க்கும் வளரும்
வம்பு அன்பை தளர்க்கும்.
_____________________________________________________

பேதம் ஒழித்து சமத்துவம் பிறக்க
ஓதும் வேதம் காதல்.
_____________________________________________________

விரக்கடை அளந்து வண்டலில் விதைத்தாலும்
விளையாது சத்தில்லா விதை.
_____________________________________________________

இருமனம் இணங்கி பிணங்கி சுணங்கும்
இடியாப்ப சிக்கல் காதல்.
_____________________________________________________

இறங்கும் ஞாயிறும் உறங்கும் உள்ளமும்
என்றும் இருளை ஏற்றும்.
_____________________________________________________

மாயமோ மோகமோ மானிட சாபமோ
சகித்து சுகிக்கும் காதல்.
_____________________________________________________

இருப்பு இருப்பதால் இறுமாப்பு சுரக்கின்
இருப்பே நெருப்பாகி சுடும்.

No comments:

Post a Comment