பெயர்க்காரணம்-
குறள் என்பது ஈரடி வெண்பா.மேன்மையான வெண்பா என்பதால் திருக்குறள் என பெயரிடபட்டது.
இங்கு ஈரடி வெண்பா திரிந்து வெறும்பா ஆனதால் கிறுக்கிறள் ஆனது.
கிறுக்கிறள்- 2008AD
வாங்க!!!! வாங்க!!!!
வாங்க!!!! வாங்க!!!!நீங்க வந்து படிக்கிறதுக்கு சந்தோசம்!!
நிறை குறை சொல்லிட்டு போனா ரொம்ப சந்தோசம்!
You tube Channel-->
நிறை குறை சொல்லிட்டு போனா ரொம்ப சந்தோசம்!
You tube Channel-->
Sunday, March 14, 2010
பாகம்-12
புரியாபோதும் பிறர் சிரிக்க நாம்
சிரித்தல் கட்டாயச் சிரிப்பு.
__________________________________________________________
சபை வேண்டி சண்டைகாரர் ஆயினும்
சுமக்கும் சிரிப்பு புன்சிரிப்பு.
__________________________________________________________
இல்லா இடத்தில் இருக்காது -இருக்கும்
இடத்தில் இல்லை இருக்காது.
__________________________________________________________
என்னாளுமே பொன்னாளாக விண்ணாள எண்ணாது
உனையாள உள்ளம் உறுதிசெய். __________________________________________________________
வலி இல்லா வாழ்வில் வழியும்
இல்லை ஒளியும் இல்லை.
__________________________________________________________
இன்பம் சுருங்கி இன்னல் பெருகும்
உள்ளம் இறுகும் எனில்.
__________________________________________________________
வெறுப்புடன் விட்டு கொடுத்தலினும் விருப்புடன்
புரிதல் கூட்டும் பயன்.
__________________________________________________________
தொடங்கும் வேலையில் அடிப்படை முதலடி
தயார்நிலை எனும் வெற்றிப்படி.
__________________________________________________________
இறங்குவார் என்று இறுமாப்பாய் இல்லாது
இறங்கலே இறுக்கம் இறக்கும்.
__________________________________________________________
விதித்தபடி வாழ்வென வாழாது நீ
வித்திட்டபடி வாழ்தல் வலிவு.
__________________________________________________________
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.
தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….
இவன்
http://www.bogy.in
Post a Comment