இல்லாதோர் பலமைல் புசிக்க நடக்க
இருப்போர் நடப்பர் செரிக்க.
__________________________________________________________
மறதி மன்னிப்பை மனிதன் மறக்க
மறைந்திடும் மன அமைதி.
__________________________________________________________
தாழ்ந்தவர் உயர்ந்தவர் தகுதி தரத்தினால்
அன்றி வளத்தினால் அல்ல.
__________________________________________________________
மாயமோ மந்திரமோ மாற்றுமோ மக்களை
முட்டாளாக்கி முடக்கும் மந்திரிகளை.
__________________________________________________________
தெரியாதார் தெரியலாம் தெரிந்தும் தெளியாதார்
தெரிந்ததால் திரிந்து துயருறுவர்.
__________________________________________________________
மாற்றாகும் மாற்றங்கள(பெரும்பாலும்) மன மகிழ்வுதரும்
உடல் மழுங்க வைக்கும்.
__________________________________________________________
உயிருடன் வாழ்தலினும் உயிர்ப்புடன் வாழ்தலே
வாழ்வில் உயர்வு தரும்.
__________________________________________________________
இன்பமே என்னாளும் துன்பம் இல்லை
ஈடில்லா இறையருள் பெறின்.
__________________________________________________________
தவறி தவறலினும் தவறாகும் என
நம்பி தவறல் தவறு.
__________________________________________________________
மது உண்டு மதி கெட்டபின்
விதி நொந்தென்ன பயன்.
4 comments:
Good one.
தெரியாதார் தெரியலாம் தெரிந்தும் தெளியாதார்
தெரிந்ததால் திரிந்து துயருறுவர்.
...The best! Superb!!
HAPPY NEW YEAR!!!
Thanksga!!! varugaikkum vaazhthukkum!!
hii.. Nice Post
Thanks for sharing
For latest stills videos visit ..
More Entertainment
www.ChiCha.in
Post a Comment