வாங்க!!!! வாங்க!!!!

வாங்க!!!! வாங்க!!!!நீங்க வந்து படிக்கிறதுக்கு சந்தோசம்!!
நிறை குறை சொல்லிட்டு போனா ரொம்ப சந்தோசம்!

You tube Channel-->

Saturday, May 7, 2011

பாகம் -18

முனைப்புடன் விதைக்கும் உழைப்பு வளர்க்கும்
செழிப்புடன் நன் மதிப்பு.
__________________________________________________________

எனதே என்றிராது நமதே என்றிருப்பின்
எளிதே பிறக்கும் நன்மை.
__________________________________________________________

நாவில் நற்சொல்லும் நெஞ்சில் நஞ்சும்
இனித்திடும் விஷம் போலாம்.
__________________________________________________________

மனித நேயம் மறந்து மதநேயமாகி
மண்ணில் மறையும் மனிதம்.
__________________________________________________________

அறுபதுகள் இருபதை புரிதல் எளிது
இருபதுகள் அறுபதை அறிவதினும்.
__________________________________________________________

எச்சரிக்கை அறியாது வாழ்வானும் உண்டு
எச்சரிக்கையாய் வீழ்வானும் உண்டு.
__________________________________________________________

மாற்றிட முடியுமா இயற்கையின் சீற்றத்தை
இறுமாப்பு மனிதனின் இயல்கள்.
__________________________________________________________

மனதில் மரித்து உதட்டில் சிரித்தாலும்
உள்ள(த்)தை உரைத்திடும் கண்.
__________________________________________________________

பட்டம் பெற்றோர் பட்டம் விட்டாலும்
நூலில்லா பட்டம் பாழ்.
__________________________________________________________

போட்டியில் போட்டியிடாது வாழ்வில் போட்டியிட
வாழ்க்கை நொடிந்து வாடிடும்.
__________________________________________________________

2 comments:

Chitra said...

அருமை... சனி - ஞாயிறு, பதிவுலகம் பக்கம் அதிகம் வர இயலாது என்பதால், இந்த பதிவை மிஸ் செய்து விட்டேன் போல.

சி.பி.செந்தில்குமார் said...

sir.. as u wish i post that matter. thanx for yr suggestion

Post a Comment