பெயர்க்காரணம்-
குறள் என்பது ஈரடி வெண்பா.மேன்மையான வெண்பா என்பதால் திருக்குறள் என பெயரிடபட்டது.
இங்கு ஈரடி வெண்பா திரிந்து வெறும்பா ஆனதால் கிறுக்கிறள் ஆனது.
கிறுக்கிறள்- 2008AD
வாங்க!!!! வாங்க!!!!
வாங்க!!!! வாங்க!!!!நீங்க வந்து படிக்கிறதுக்கு சந்தோசம்!!
நிறை குறை சொல்லிட்டு போனா ரொம்ப சந்தோசம்!
You tube Channel-->
நிறை குறை சொல்லிட்டு போனா ரொம்ப சந்தோசம்!
You tube Channel-->
Sunday, June 7, 2009
பாகம்-3
பிரிதல் கூட்டும் புரிதல் அதுபோல்
நல்லறிதல் கூட்டும் காதல்.
___________________________________________________________
வீழ்ந்து மடிவதில்லை விதைகள் வீறிட்டு
எழுந்திடும் வானுயர் விருட்சமாய்.
___________________________________________________________
அழுகை ஆனந்தமோ அயர்ச்சியோ ஆற்றாமையோ
அதனாழம் அழுவாரே அறிவார் .
___________________________________________________________
தவறும் சரியாகும் முதலாளியெனில் மாறாக
சரியும் தவறாகும் தொழிலாளியிடத்து.
___________________________________________________________
பாசப்பேச்சோ ஏச்சுப்பேச்சோ பொருளில்லை எனில்
பேச்சால் ஏதும் பயனில்லை.
___________________________________________________________
தெருவிலிருந்து தேரோ தேரிலிருந்து தெருவோயென
தீர்மானிக்கும் தருணம் திருமணம்.
___________________________________________________________
சுடு சொற்கள் சொலல் சுலபமாம்
சிரமமாம் சொல்லியன அள்ளல்.
___________________________________________________________
தெளிந்த நீராயினும் நிறமாறித் தெரியும்
கருந்திரை கண்கொண்டு கண்டால்.
___________________________________________________________
சுகமாய் சுமந்தவை சுமையாய் ஆனாலும்
சுமத்தலே சுகமென கொள்.
___________________________________________________________
மறுமை மறக்கவைக்கும் எளிமை எடுத்துரைக்கும்
வெறுமை விரும்பவைக்கும் வறுமை.
___________________________________________________________
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment