வாங்க!!!! வாங்க!!!!

வாங்க!!!! வாங்க!!!!நீங்க வந்து படிக்கிறதுக்கு சந்தோசம்!!
நிறை குறை சொல்லிட்டு போனா ரொம்ப சந்தோசம்!

You tube Channel-->

Wednesday, September 8, 2021

பாகம் -28

மனதியங்க இன்பமும் துன்பமும் உருப்பெறும்
மனதுறங்க பேரானந்தம் நிலைபெறும்.
_____________________________________________________

மாற்றம் இல்லா மன்னிப்பு நம்மை
ஏமாற்றும் நல்ல நாடகமே.
_____________________________________________________

இருந்தும் இல்லாமல் இருந்தால் இறக்கும்வரை
இரந்து இருத்தல் இராது.
_____________________________________________________

நடந்ததை மறந்து நடப்பதை ரசிக்க
மனதில் பிறக்கும் மகிழ்ச்சி.
_____________________________________________________

அருவாய் உருவாய் அனைத்திலும், அசையாது
அசையும் அதிசயம் சிவம்.
_____________________________________________________

சிவனவன் கண்பட்டு பண்பட்ட மனதை
எச்சொல்லும் புண்படுத்த முடியாது.
_____________________________________________________

எளிதாம் உற்றோரை நோகடித்தல், அரிதாம்
அவரை மகிழ்வித்து மகிழ்தல்.
_____________________________________________________

நதியோ குருதியோ அதன் ஓட்டத்தை
நிர்ணயிப்பது பிரபஞ்சத்தின் விதி. 
_____________________________________________________

தவற்றை விட்டுவிட்டு, விட்டுக் கொடுத்து
தட்டிகொடுக்க மேம்படும் உறவு.
_____________________________________________________

நியதியை நிந்திப்பவரை நிதியில் நியமித்து
நீதி நேடுதல் நெடுங்கேடு.
_____________________________________________________

No comments:

Post a Comment