வாங்க!!!! வாங்க!!!!

வாங்க!!!! வாங்க!!!!நீங்க வந்து படிக்கிறதுக்கு சந்தோசம்!!
நிறை குறை சொல்லிட்டு போனா ரொம்ப சந்தோசம்!

You tube Channel-->

Sunday, April 4, 2021

பாகம் -27


நம்மை நோகடித்தவரை மன்னித்தலே நம்
மனதை குணப்படுத்தும் அருமருந்து.
_____________________________________________________

நம்பிக்கை இல்லாதார்க்கு நம்பியவரின் நம்பிக்கை
யாவும் மூட நம்பிக்கையே.
_____________________________________________________

வந்தவழி மறவாது வாழும் காலம்
யாவும் வசந்த காலமே.
_____________________________________________________

என்னால் எனது எனும் மாயை
மறையும் தருணம் மரணம்.
_____________________________________________________

நல்லறம் நழுவாது நக்கிப் பிழையாது
நடுநிலை நிற்கும் நல்லூடகம்.
_____________________________________________________

ஊர்பசி போக்க தன்பசி மறந்து
உழைத்து இளைத்தவன் விவசாயி.
_____________________________________________________

நொடியை யுகமாக்கி தவிக்க வைத்து
தளர்த்திடும் முதுமையில் தனிமை.
_____________________________________________________

சார்ந்து வாழாத தம்பதி சேர்ந்து
வாழ்வதில் பயன் இல்லை.
_____________________________________________________

வீழ்த்தியவர் வியக்க வாழ்தல் மேன்மை
வீழ்த்த வாழ்தல் மடமை.
_____________________________________________________

பிறப்பது இறப்பதற்கே என்பது உறைக்கும்
தருணம் நல்லுறவின் மரணம்.
_____________________________________________________

No comments:

Post a Comment