வாங்க!!!! வாங்க!!!!

வாங்க!!!! வாங்க!!!!நீங்க வந்து படிக்கிறதுக்கு சந்தோசம்!!
நிறை குறை சொல்லிட்டு போனா ரொம்ப சந்தோசம்!

You tube Channel-->

Wednesday, June 22, 2022

பாகம் -29

சட்டத்தை சட்டை செய்யாத சண்டியரை

சரணடைய செய்வது நல்லரசு.

_____________________________________________________

என்ன கிடைக்குமென எதிர்நோக்கி நடப்பவர்க்கு

கொடுத்தே கெடுப்பான் சிவன்.

_____________________________________________________

யோசிக்காது நேசித்து நமசிவாயென சுவாசிக்க

உன்னுள் மலரும் சிவம்.

_____________________________________________________

நடந்ததையே நினைத்து நாட்களை நகர்த்த

நரகமே நாளும் நமக்கு.

_____________________________________________________

முடியாதெது முடிந்தும் முடியாதெது என்றறிய

முடியா வயது 45.

_____________________________________________________

உன்னால் முடியும் என்பதால் உனக்குதவா

பொருளை வாங்குதல் மடமை.

_____________________________________________________

இலவசமென்று ஏதுமில்லை அப்படி கிடைத்தால்

நீதான் அங்கு விளைபொருள்.

_____________________________________________________

அன்பை மனதிலும் ஆத்திரத்தை பேச்சில்மட்டும்

உதிர்க்கும் உறவு வரம்.

_____________________________________________________

பணம் வாங்கி வாக்களிக்கும் மக்கள்

மாக்களாய் மட்டுமே மதிக்கப்படுவர்.

_____________________________________________________

மனங்கடந்த உயர் உணர்வின் உள்ளிருக்கும்

சத்தியாமான சாத்தியம் சிவம்.


2 comments:

Anonymous said...

Super

Anonymous said...

Write more and more kirukiral

Post a Comment