வாங்க!!!! வாங்க!!!!

வாங்க!!!! வாங்க!!!!நீங்க வந்து படிக்கிறதுக்கு சந்தோசம்!!
நிறை குறை சொல்லிட்டு போனா ரொம்ப சந்தோசம்!

You tube Channel-->

Sunday, June 7, 2009

பாகம்-1

Note:Kirukkural மட்டுமே Thirukkural அல்ல



தொழில் உனக்கு தெய்வமானால் தெய்வம்
உனக்கு தோழன் ஆவான்.
___________________________________________________________

சிதைந்த சீப்பினால் சிக்கெடுத்தால் சிரமம்
சீப்பிற்கு அல்ல சிகைக்குத்தான்.
___________________________________________________________

(NOT having) (not using) (not being)
இல்லாமல் இல்லாமல் இல்லாமல்-இருந்தும்
இல்லாமல் இருப்பதே எளிமையாம்.
___________________________________________________________

குடிபோதையில் நின் வழி - உன்
குடிவீழ வெட்டும் குழி.
___________________________________________________________

ஏறும்போது இறங்குவதும் இறங்கும்போது ஏறுவதும்
பங்குசந்தைக்கும் ரத்தக்கொதிபிற்கான உறவு.
___________________________________________________________

துன்பத்தால் துவளாமல் துன்பத்தை துன்புறுத்தல்
துயர் துடைக்கும் திறனாம்.
___________________________________________________________

அணுவை அணுஅணுவாய் ஆராய்ந்தாலும் - அணுவால்
அமைதியைவிட ஆபத்தே அதிகம்.
___________________________________________________________

சினங்கொண்டு சீறுமுன் சிறிதேனும் சிந்தித்தால்
சீறிய சிரமமும் சிறிதாகும்.
___________________________________________________________

நீருற்றி நெடுவயல் நட்டாலும் நெற்மணி
கிட்டாது நட்டது புல்லென்றால்.
___________________________________________________________

காணாத காட்சியெல்லாம் கண்முன்னே நடந்தாலும்
கண்டுகளிக்க இயலாது கண்மூடியிருந்தால்
___________________________________________________________

3 comments:

Anonymous said...

Hi K....:-)
Just read all the ones I missed....keep up yr good work....hope u can publish yr "kirukals" someday.....good luck....ipadiku....suvai :-)

Chef.Palani Murugan, said...

இதுவே.... கிறுக்கிய‌தா,அப்ப‌ ந‌ல்லா எழுதினா....வாழ்த்துக்க‌ள் ந‌ண்பா

கிறுக்கன் said...

நன்றி நண்பரே...வரவுக்கும் வாழ்த்துக்கும்...

Post a Comment