வாங்க!!!! வாங்க!!!!

வாங்க!!!! வாங்க!!!!நீங்க வந்து படிக்கிறதுக்கு சந்தோசம்!!
நிறை குறை சொல்லிட்டு போனா ரொம்ப சந்தோசம்!

You tube Channel-->

Saturday, February 13, 2010

பாகம்-11


தவம் நிதம் செய்யினும் பதம்
இல்லா மனம் பாழ்.
__________________________________________________________

துவங்குவதை துவங்காது துவங்கிய துவக்கங்கள்
துவங்கிய பின்னும் துவங்குவதில்லை.
__________________________________________________________

இன்பம் சுருங்கி இன்னல் பெருகும்
உள்ளம் இறுகும் எனில்.
__________________________________________________________

காலம் மாற ஞாலம் மாற
நாமும் மாறலே நலம்.
__________________________________________________________

மஞ்சமே தஞ்சமென மருளாது நெஞ்சத்தை
மகிழ்வித்து மகிழ்பவன் நல்மனிதன்.
__________________________________________________________

மறப்போம் மக்களை மழுக்கி மகிழ்வில்
மருளும் மன்னர்களை மறுப்போம்.
__________________________________________________________

உணர்ச்சிபூர்வ முடிவினும் உரிய உத்திகள்
உடனான முடிவுகள் உரவு.
__________________________________________________________

உயர்வை காட்டும் வளமை என்றும்
எளிமை கூட்டும் வலிமை.
__________________________________________________________

சிகரம் மற்றும் வாழ்வில் ஏற்றம்
சிரமம் இறக்கம் எளிதாம்.
__________________________________________________________

அறியா இயல்கள் இயலா தெனும்
இயல்கள் அறியும் அறிவியல்.

4 comments:

அன்புடன் அருணா said...

புத்தகமாய் போடலாமே!

கிறுக்கன் said...

சீந்துவாரில்லா வலைப்பதிவு ஒன்றும் ஆகாது ஆனால் புத்தகம் அப்படி இல்லையே டீச்சர்!!!

Sakthi said...

nice

கிறுக்கன் said...

Thank you sakthi.

Post a Comment