வாங்க!!!! வாங்க!!!!

வாங்க!!!! வாங்க!!!!நீங்க வந்து படிக்கிறதுக்கு சந்தோசம்!!
நிறை குறை சொல்லிட்டு போனா ரொம்ப சந்தோசம்!

You tube Channel-->

Saturday, October 2, 2010

பாகம் -15

உறவு உயர்ந்திடும் உள்ளம் இணைந்திடும்
உற்றோரை உளமார பாராட்ட.
__________________________________________________________

தரம் கூட்டும் உரம் தரமில்லையெனில்
உரமிட்டு என்ன பயன்.
__________________________________________________________

பணங்கண்டு குணம் மாறும் உறவு
விளக்கு இல்லா இரவு.
__________________________________________________________

பண்பிடம் பணிவும் பகையிடம் துணிவும்
பலம் தரும் குணமாம்.
__________________________________________________________

மென்மையாய் மொழிவதால் மெய்யென திரிந்து
உயர்ந்து விடாது பொய்.
__________________________________________________________

உன்னை உள்ளூர உணர உள்ளம்
உருகும் உன்னதம் ஊறும்.
__________________________________________________________

உண்டு உண்டிமட்டும் பெருக்கி உழலும்
மனிதரிடம் உண்டோ மதி.
__________________________________________________________

பக்தரின் பக்தி பழுதானால் பரிசுத்த
பகவானை பழுப்பென பழிப்பான்.
__________________________________________________________

பேசி தெரிதலினும் நேசித்து அறிதல்
பிரியா உறவின் வலிவு.
__________________________________________________________
வீட்டை விட்டு வெளியே வராதவரை
தெரிவதில்லை விடியலின் கரை.

2 comments:

சி.பி.செந்தில்குமார் said...

நல்ல முயற்சி,தொடரட்டும் உங்கள் பணி.எனக்குப்பிடித்தது >>>>>

வீட்டை விட்டு வெளியே வராதவரை
தெரிவதில்லை விடியலின் கரை. >>>>

வாழ்த்துக்கள்

கிறுக்கன் said...

நன்றி சி.பி.. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்....

Post a Comment