வாங்க!!!! வாங்க!!!!

வாங்க!!!! வாங்க!!!!நீங்க வந்து படிக்கிறதுக்கு சந்தோசம்!!
நிறை குறை சொல்லிட்டு போனா ரொம்ப சந்தோசம்!

You tube Channel-->

Thursday, December 30, 2010

பாகம் -17

இல்லாதோர் பலமைல் புசிக்க நடக்க
இருப்போர் நடப்பர் செரிக்க.
__________________________________________________________

மறதி மன்னிப்பை மனிதன் மறக்க
மறைந்திடும் மன அமைதி.
__________________________________________________________

தாழ்ந்தவர் உயர்ந்தவர் தகுதி தரத்தினால்
அன்றி வளத்தினால் அல்ல.
__________________________________________________________
மாயமோ மந்திரமோ மாற்றுமோ மக்களை
முட்டாளாக்கி முடக்கும் மந்திரிகளை.
__________________________________________________________

தெரியாதார் தெரியலாம் தெரிந்தும் தெளியாதார்
தெரிந்ததால் திரிந்து துயருறுவர்.
__________________________________________________________

மாற்றாகும் மாற்றங்கள(பெரும்பாலும்) மன மகிழ்வுதரும்
உடல் மழுங்க வைக்கும்.
__________________________________________________________

உயிருடன் வாழ்தலினும் உயிர்ப்புடன் வாழ்தலே
வாழ்வில் உயர்வு தரும்.
__________________________________________________________

இன்பமே என்னாளும் துன்பம் இல்லை
ஈடில்லா இறையருள் பெறின்.
__________________________________________________________

தவறி தவறலினும் தவறாகும் என
நம்பி தவறல் தவறு.
__________________________________________________________

மது உண்டு மதி கெட்டபின்
விதி நொந்தென்ன பயன்.

2 comments:

Chitra said...

தெரியாதார் தெரியலாம் தெரிந்தும் தெளியாதார்
தெரிந்ததால் திரிந்து துயருறுவர்.

...The best! Superb!!

HAPPY NEW YEAR!!!

கிறுக்கன் said...

Thanksga!!! varugaikkum vaazhthukkum!!

Post a Comment