வாங்க!!!! வாங்க!!!!

வாங்க!!!! வாங்க!!!!நீங்க வந்து படிக்கிறதுக்கு சந்தோசம்!!
நிறை குறை சொல்லிட்டு போனா ரொம்ப சந்தோசம்!

You tube Channel-->

Saturday, November 29, 2014

பாகம் -21

சுணக்கம் இல்லா சுய சிந்தனையை
சுடர்விட செய்யும் சுதந்திரம்.
_____________________________________________________

தளராது துவளாது துணிந்திடும் துணிவிடம்
பாயாது பயந்திடும் பயம்.
_____________________________________________________

துணிவாய் பணிவாய் கனிவாய் இனிவாய்
உயர்வாய் திறவாய் திருவாய்.
_____________________________________________________

உழையாதும் உயர்த்தும் உயிர் பிரிவதால்
உயிர் பெறும் உயில்.
_____________________________________________________

பிணி மறந்து பணி செய்யும்
பாச பட்டறை கருவறை.
_____________________________________________________

மதி மறைத்து பிதற்ற வைக்கும்
மனிதனின் கிறுக்கும் செருக்கும்.
_____________________________________________________

வலி மறந்து வாழ்வில் ஒளி
தேடும் திருநாள் தீபாவளி.
_____________________________________________________

மனவீட்டில் பணம் குடியேற மறுகணமே
மனங்குன்றி குடிபெயரும் குணம்.
_____________________________________________________

தகரமாய் இருப்பினும் குறைவில்லை துருவற்று
தரமாய் இருக்கும் வரை.
_____________________________________________________

பெரும்படை முன் வீழா மன்னனும்
மெல்லிடை முன் வீழ்வதுண்டு.
_____________________________________________________

No comments:

Post a Comment