வாங்க!!!! வாங்க!!!!

வாங்க!!!! வாங்க!!!!நீங்க வந்து படிக்கிறதுக்கு சந்தோசம்!!
நிறை குறை சொல்லிட்டு போனா ரொம்ப சந்தோசம்!

You tube Channel-->

Tuesday, June 23, 2009

பாகம்-4


நல்லதை செய்த உடனே மறந்துவிடு
கெட்டதை மறந்தும் செய்துவிடாதே.
___________________________________________________________

எண்ணத்தில் ஏமாற்று எண்ணம் கீழிறங்க
சுற்றத்தில் சந்தோசம் மேலோங்கும்.
___________________________________________________________

திமிராகி தனியாகி துயராகி வாழ்வில்
தோல்வியுறச் செய்யும் தற்பெருமை .
___________________________________________________________

தீதெது நன்றெது என தெளிந்தறிதல்
திடமான தீர்வுக்கான தேர்வாம்.
___________________________________________________________

வீதியில் (வாழ்வில்) சில விபத்தை கண்டு
ஊர்தியை (உழைப்பை) தவிர்ப்பது மடமையாம்.
___________________________________________________________

காரியத்தில் வீரியம் இருந்தால் காணும்
கஷ்டங்களும் இஷ்டமாய் கனியும்.
___________________________________________________________

தூற்றலால் துவளாமையும் போற்றலால் தற்பெருமையும்
தீண்டா வாழ்வே தெளிவுறும்.
___________________________________________________________

நிம்மதி என்பது விண்ணிலில்லை நினைத்து
நிகழ்தும் நின்மதியின் எல்லை.
___________________________________________________________

உண்மைகள் உறங்கும் இறக்காது - பொய்கள்
உண்மையென உலவும் நிலைக்காது.
___________________________________________________________

கனியான பின்னாலும் இனிவில்லை எனில்
தரமில்லை என்றே தள்ளிவைப்பர்.
___________________________________________________________

No comments:

Post a Comment