வாங்க!!!! வாங்க!!!!

வாங்க!!!! வாங்க!!!!நீங்க வந்து படிக்கிறதுக்கு சந்தோசம்!!
நிறை குறை சொல்லிட்டு போனா ரொம்ப சந்தோசம்!

You tube Channel-->

Thursday, July 2, 2009

பாகம்-5



பிறப்பால் பெரும்பேறு பெறுவதில்லை யாரும்
இருப்பால் இருவினைச் சேரும்.
___________________________________________________________

முதிர்ச்சியை கூட்டும் முன்யோசனை மாறாய்
முட்டாள் ஆக்கும் பின்யோசனை.
___________________________________________________________

பிடித்தப்பிடியில் பலனில்லை என்றாலும் பித்தராய்
பிடிக்க வைக்கும் பிடிவாதம்.
___________________________________________________________

உன் உடமை கண்டு உறவாடும்
உறவு உப்பற்ற உணவு.
___________________________________________________________

சும்மா இருத்தல் சுகம் எதுவரையெனில்
சும்மா இருத்தல் சுமையாகும்வரை.
___________________________________________________________

உயிர்வலி உன்னுள் உணர்த்தும் உண்மை
உணரவேயன்றி உரைத்திடல் ஆகாது.
___________________________________________________________

உளமாற பாராட்டும் உள்ளங்கள் உள்ளவரை
வளமோடு வாழும் கலை.
___________________________________________________________

நடுநிலை நழுவாது நன்றும் தீதும்
நயம்பட நவிலும் நட்பு.
___________________________________________________________

இல்லதில் இல்லாள் இனியவளாய் இருந்திட்டால்
இல்லறம் இனித்திடும் இன்பத்தில்.
___________________________________________________________

இலக்கணமாய் இருந்துக்காட்டி அன்பால் இளையோரை
வழிநடத்தல் சான்றோர் செயல்.

2 comments:

Anonymous said...

Hi K....:-)
superb quotes both about the ilatharasi & the saandror.
I am able to post comments now ;-)

Aruna said...

எல்லாமே சூப்பரா இருக்குங்க! இதுக்குப் போய் கிறுக்குறள்னு பேர் வைச்சுருக்கீங்களே!!!???
பூங்கொத்து!

Post a Comment