வாங்க!!!! வாங்க!!!!

வாங்க!!!! வாங்க!!!!நீங்க வந்து படிக்கிறதுக்கு சந்தோசம்!!
நிறை குறை சொல்லிட்டு போனா ரொம்ப சந்தோசம்!

You tube Channel-->

Monday, December 14, 2009

பாகம்-10

சொல்லும் செயலும் கனிவாய் பிறக்க
எல்லாத் துயரும் மரிக்கும்.
__________________________________________________________

அறுஞ்சுவை உணவினும் பெருஞ்சுவை ஆரோக்கியம்
அருளும் நல் நகைச்சுவை.
__________________________________________________________

களைப்பு கபடில்லா உழைப்பின் நிறைவு
கட்டுக் கடங்கா உயர்வு.
__________________________________________________________

ஏற்றத்தில் நண்பன் உனை அறிவான்
இறக்கத்தில் நண்பனை நீயறிவாய்.
__________________________________________________________

செல்லும் சாலை தவறாயின் சீக்கிரம்
சென்று என்ன பயன்.
__________________________________________________________

இல்லாமை இயலாமை இதயத்தில் வளர
சொல்லாமல் வளரும் பொறாமை.

__________________________________________________________

குன்றா குன்றாய் கூடும் குணம்
கொடுத்து காக்கும் கொடை.
__________________________________________________________

நாளும் நெஞ்சில் நஞ்சை நட்டாலும்
நன்மை நவிலும் நற்குணம்.
__________________________________________________________

செய்யும் செயலில் சிரத்தை சீராக
செயலின் சிரமம் சிறிதாகும்.

__________________________________________________________

சோதனையை வினையாய் வேதனையாய் நினையாது
சாதனையாய் புனையும் துணிவு.






2 comments:

அன்புடன் அருணா said...

நல்லாருக்கு!

கிறுக்கன் said...

தங்கள் வரவுக்கு நன்றி.

Post a Comment