பெயர்க்காரணம்-
குறள் என்பது ஈரடி வெண்பா.மேன்மையான வெண்பா என்பதால் திருக்குறள் என பெயரிடபட்டது.
இங்கு ஈரடி வெண்பா திரிந்து வெறும்பா ஆனதால் கிறுக்கிறள் ஆனது.
கிறுக்கிறள்- 2008AD
வாங்க!!!! வாங்க!!!!
வாங்க!!!! வாங்க!!!!நீங்க வந்து படிக்கிறதுக்கு சந்தோசம்!!
நிறை குறை சொல்லிட்டு போனா ரொம்ப சந்தோசம்!
You tube Channel-->
நிறை குறை சொல்லிட்டு போனா ரொம்ப சந்தோசம்!
You tube Channel-->
Monday, August 17, 2009
பாகம்-7
இரை குறை கண்டு இறைமாறும்
இனம் இறை காணா.
___________________________________________________________
அறிவும் செறிவும் ஒளிரும் உள்ளம்
பணிந்து கனிந்து மிளிரும்.
___________________________________________________________
மலராய் மலர்வாய் கனியாய் கனிவாய்
அன்பே அணியாய் அணிவாய்.
___________________________________________________________
மகிழ்ந்து மகிழ்தலினும் மகிழ்வித்து மகிழும்
மனமே மனமாற மகிழ்வுறும்.
___________________________________________________________
துடுப்பு இல்லா படகு போன்றது
பிடிப்பு இல்லா படிப்பு.
___________________________________________________________
புறத்தோற்றம் பார்த்து பிரிவினை போற்றாது
அகத்தோற்றம் பகுத்து பழகு.
___________________________________________________________
செய்யும் செயல் சரியாவதும் தவறாவதும்
சுற்றத்தின் சிந்தை வெளிப்பாடே.
___________________________________________________________
நீ காணாததை உன் பிள்ளைக்காண
நீ கண்டதை காணாதாக்காதே.
___________________________________________________________
குறைகூறல் குறைய குணம் கூடும்
காணும் கவலை கலைந்தோடும்.
___________________________________________________________
செல்வந்தராக செல்வம் சேர்த்தல் ஒருவழி
செலவு சிறுத்தல் மறுவழி.
___________________________________________________________
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
awesome!!! k...:-) suvai
Post a Comment