வாங்க!!!! வாங்க!!!!

வாங்க!!!! வாங்க!!!!நீங்க வந்து படிக்கிறதுக்கு சந்தோசம்!!
நிறை குறை சொல்லிட்டு போனா ரொம்ப சந்தோசம்!

You tube Channel-->

Wednesday, May 19, 2010

காதல் கல்லறை

இளமை திமிரில்
இச்சை கொண்டு
இல்லம் மறந்து
இசைந்து செல்ல

இரயில் ஆனாலும்
என்னவன் விரும்ப
என்னை முழுதாய்
விருந்தாய் படைக்க

விழித்து பார்த்தால்
வீதியில் நான்
நாயகனும் இல்லை
நகையும் இல்லை

எச்சில் இலையாய்
விழுந்த என்னில்
மிச்சம் பார்த்து
எச்சிலை நாய்கள்

நித்தம் நித்தம்
என்னை சுகிக்க
உயிர் வேண்டி
நானும் சகிக்க

வாடிய பின்னும்
தான் இன்புற
என்னை இம்சித்து
ரசித்த சுற்றம்

உணவின்றி
உயிர் மறித்து
உடல் எரித்த
பின் தான் விட்டது
என்னை....

நாட்டில் எண்ணிக்கை
கூடியதால் தான்
காட்டில் விலங்குகளின்
எண்ணிக்கை குறைந்தனவோ...
(காதலால் கற்பிழந்து தன்னிலை இழந்து கல்லறை செல்லும் வரை மனித மிருகங்களால் களங்கபட்ட மஹாவிறுக்கு...

நேசித்த பாவத்தால்
வேசி ஆனவள்
)

பாதித்ததால் பதித்தேன்
இப்பதிவு
உங்களை பாதித்தால்
என்னை மன்னிக்கவும்...

No comments:

Post a Comment