ஒன்றுபட்டு குரல் கொடுக்க - ஒடுக்கும்
அரசும் செவி மடுக்கும்.
_____________________________________________________
பிரார்த்தனை ஆராதனை பலன்தரா பகட்டிடம்
பக்தி பணியும் போது.
_____________________________________________________
சுணக்கம் இல்லா சுய சிந்தனையை
சுடர்விட செய்யும் சுதந்திரம்.
_____________________________________________________
வீம்பு வம்பை வளர்க்கும் வளரும்
வம்பு அன்பை தளர்க்கும்.
_____________________________________________________
பேதம் ஒழித்து சமத்துவம் பிறக்க
ஓதும் வேதம் காதல்.
_____________________________________________________
விரக்கடை அளந்து வண்டலில் விதைத்தாலும்
விளையாது சத்தில்லா விதை.
_____________________________________________________
இருமனம் இணங்கி பிணங்கி சுணங்கும்
இடியாப்ப சிக்கல் காதல்.
_____________________________________________________
இறங்கும் ஞாயிறும் உறங்கும் உள்ளமும்
என்றும் இருளை ஏற்றும்.
_____________________________________________________
மாயமோ மோகமோ மானிட சாபமோ
சகித்து சுகிக்கும் காதல்.
_____________________________________________________
இருப்பு இருப்பதால் இறுமாப்பு சுரக்கின்
இருப்பே நெருப்பாகி சுடும்.
1 comment:
hii.. Nice Post
Thanks for sharing
For latest stills videos visit ..
More Entertainment
www.ChiCha.in
Post a Comment