சுணக்கம் இல்லா சுய சிந்தனையை
சுடர்விட செய்யும் சுதந்திரம்.
_____________________________________________________
தளராது துவளாது துணிந்திடும் துணிவிடம்
பாயாது பயந்திடும் பயம்.
_____________________________________________________
துணிவாய் பணிவாய் கனிவாய் இனிவாய்
உயர்வாய் திறவாய் திருவாய்.
_____________________________________________________
உழையாதும் உயர்த்தும் உயிர் பிரிவதால்
உயிர் பெறும் உயில்.
_____________________________________________________
பிணி மறந்து பணி செய்யும்
பாச பட்டறை கருவறை.
_____________________________________________________
மதி மறைத்து பிதற்ற வைக்கும்
மனிதனின் கிறுக்கும் செருக்கும்.
_____________________________________________________
வலி மறந்து வாழ்வில் ஒளி
தேடும் திருநாள் தீபாவளி.
_____________________________________________________
மனவீட்டில் பணம் குடியேற மறுகணமே
மனங்குன்றி குடிபெயரும் குணம்.
_____________________________________________________
தகரமாய் இருப்பினும் குறைவில்லை துருவற்று
தரமாய் இருக்கும் வரை.
_____________________________________________________
பெரும்படை முன் வீழா மன்னனும்
மெல்லிடை முன் வீழ்வதுண்டு.
_____________________________________________________
சுடர்விட செய்யும் சுதந்திரம்.
_____________________________________________________
தளராது துவளாது துணிந்திடும் துணிவிடம்
பாயாது பயந்திடும் பயம்.
_____________________________________________________
துணிவாய் பணிவாய் கனிவாய் இனிவாய்
உயர்வாய் திறவாய் திருவாய்.
_____________________________________________________
உழையாதும் உயர்த்தும் உயிர் பிரிவதால்
உயிர் பெறும் உயில்.
_____________________________________________________
பிணி மறந்து பணி செய்யும்
பாச பட்டறை கருவறை.
_____________________________________________________
மதி மறைத்து பிதற்ற வைக்கும்
மனிதனின் கிறுக்கும் செருக்கும்.
_____________________________________________________
வலி மறந்து வாழ்வில் ஒளி
தேடும் திருநாள் தீபாவளி.
_____________________________________________________
மனவீட்டில் பணம் குடியேற மறுகணமே
மனங்குன்றி குடிபெயரும் குணம்.
_____________________________________________________
தகரமாய் இருப்பினும் குறைவில்லை துருவற்று
தரமாய் இருக்கும் வரை.
_____________________________________________________
பெரும்படை முன் வீழா மன்னனும்
மெல்லிடை முன் வீழ்வதுண்டு.
_____________________________________________________
No comments:
Post a Comment