வாங்க!!!! வாங்க!!!!

வாங்க!!!! வாங்க!!!!நீங்க வந்து படிக்கிறதுக்கு சந்தோசம்!!
நிறை குறை சொல்லிட்டு போனா ரொம்ப சந்தோசம்!

You tube Channel-->

Wednesday, December 12, 2018

பாகம் -25


உற்றவர் செய்வினை வதைத்தாலும் விட்டுகொடுக்க
இயலாது உருத்தி கொல்லும்.
_____________________________________________________

சிந்தை சிதைந்து பந்தம் சிதையும்
பாழ் ஊண் கள்ளால்.
_____________________________________________________

பாரந்தாங்கா மேகம் மழைத்துளி எனில்
மனந்தாங்கா பாரம் விழித்துளி.
_____________________________________________________

மாற்றான் குறை நோக்கிலர் இருக்கும்
தன் குறை அறிந்தவர்.
_____________________________________________________

படைப்பில் பிழையில்லா உருவமும் இல்லை
குறையில்லா மனிதரும் இல்லை.
_____________________________________________________

சுபநிகழ்வில் ஏற்றதாழ்வு பதிவாகும் இடம்
சீர்செய்யும் சீர்கெட்ட சபை.
_____________________________________________________

கொடைமறந்து கொடுத்ததை தானே கொண்டால்
கொடுத்தும் கெடுப்பான் இறைவன்.
_____________________________________________________

தர்மத்தை நாம் மறந்து வாழ்வதால்
அதர்மம் நம்மை ஆள்கிறது.
_____________________________________________________

உள்ளத்தில் உள்ளதை உள்ளபடி உரைக்காது
ஊமையாய் உள்ளத்தை ஊனமாக்கும்.
_____________________________________________________

உற்றோரை உலுக்கி உறுத்தி உருகுலைத்திடும்
உற்ற உறவின் மனநோய் .
_____________________________________________________

1 comment:

Unknown said...

Please write more...

Post a Comment