உற்றவர் செய்வினை வதைத்தாலும் விட்டுகொடுக்க
இயலாது உருத்தி கொல்லும்.
_____________________________________________________
சிந்தை சிதைந்து பந்தம் சிதையும்
பாழ் ஊண் கள்ளால்.
_____________________________________________________
பாரந்தாங்கா மேகம் மழைத்துளி எனில்
மனந்தாங்கா பாரம் விழித்துளி.
_____________________________________________________
மாற்றான் குறை நோக்கிலர் இருக்கும்
தன் குறை அறிந்தவர்.
_____________________________________________________
படைப்பில் பிழையில்லா உருவமும் இல்லை
குறையில்லா மனிதரும் இல்லை.
_____________________________________________________
சுபநிகழ்வில் ஏற்றதாழ்வு பதிவாகும் இடம்
சீர்செய்யும் சீர்கெட்ட சபை.
_____________________________________________________
கொடைமறந்து கொடுத்ததை தானே கொண்டால்
கொடுத்தும் கெடுப்பான் இறைவன்.
_____________________________________________________
தர்மத்தை நாம் மறந்து வாழ்வதால்
அதர்மம் நம்மை ஆள்கிறது.
_____________________________________________________
உள்ளத்தில் உள்ளதை உள்ளபடி உரைக்காது
ஊமையாய் உள்ளத்தை ஊனமாக்கும்.
_____________________________________________________
உற்றோரை உலுக்கி உறுத்தி உருகுலைத்திடும்
உற்ற உறவின் மனநோய் .
_____________________________________________________
1 comment:
Please write more...
Post a Comment