திறன்சிறுத்த பெருலட்சியம் என்றும் ஏமாற்றம்
திறன்பெருத்த சிறுலட்சியமே ஏற்றம்.
_____________________________________________________
மனிதரிடம் பற்று உன்னை புண்படுத்தும்
படைத்தவனிடம் பற்று பண்படுத்தும்.
_____________________________________________________
எண்ணத்தில் நேர்மை நன்மைக்கு வழிகாட்ட
எதிர்மறையோ தீமையை தீண்டவைக்கும்.
_____________________________________________________
கைபிடிக்க கைக்கூலி கேட்பவன் கணவன்
எனும் போர்வையில் கயவன்.
_____________________________________________________
பசிபோக்கும் பணம் பலரிடம் உண்டு
மனமோ சிலரிடம் மட்டும்.
_____________________________________________________
தனக்கும் முதுமை உண்டென உணராதவரால்
முளைக்கின்றன முதியோர் இல்லங்கள்.
_____________________________________________________
இக்கரையல்ல எக்கரையும் வசபடாது உனக்கு
உன்மீது அக்கரையில்லை எனில்.
_____________________________________________________
கருவிலேயே பிரபஞ்சத்தை அறிந்தாய் அதனால்
தனித்துவ உருவில் பிறந்தாய்.
_____________________________________________________
சுலபமாய் கிடைத்ததால் உயிரையும் சில
உறவையும் நாம் மதிப்பதில்லை.
_____________________________________________________
வாழ்க்கைதுணை உனது பூர்வஜென்ம பாவ
புண்ணியத்தை எடுத்துரைக்கும் கண்ணாடி.
_____________________________________________________
2 comments:
I love your kirukkural
Please write more.
Post a Comment